Hi-Q-கவிதைகள்
திருமதி வசந்தி ராஜசேகரிடம்மிருந்து
இதயச் சோலையில
ஒரு தார்ச்சாலை
காட்டியோமையோபதி
உணவில் சுவை
உடலில் சுமை
டையாபட்டிஸ்
கள்ளிப்பட்டி கவிதா
கல்லூரியில் கவிடா
ஆங்கில மோகம்
திரு ராஜசேகரிடம்மிருந்து
கிழிந்து கிடப்பது -அவன்
கோவணம் மட்டும்மல்ல வாழ்க்கையும் தான்
விவசாயி
அணைந்தது விளக்கு
எரிந்தது பூ
முதலிரவு.
திரு. அருள் - நியூயார்க் தமிழ் சங்கம்
நெஞ்சழுத்தம்
அடியே பெண்ணே!
பள்ளியில் நான்
காற்றழுத்தம் படித்தேன்
நீரழுத்தம் படித்தேன் - ஆனால்
நெஞ்சழுத்தம் படிக்கவில்லை
அதனால்தனோ என்னவோ
இன்று-
உன் நெஞ்சழுத்தத்தைக்
கணக்கிட முடியாமல்
நான் -
கண்ணீரில் முழுகிப் பொகிறேனடி!
காதல் ஜெய்க்கும்
அன்பே!
நாம்
பசித்திருந்தும் தனித்திருந்தோம்
தனித்திருந்தும் பொறுத்திருந்தோம்!
பசித்திருப்பதால் -
ஒவ்வொரு துளியும் ருசிக்கும்!
தனித்திருப்பதால்-
ஒவ்வொரு கூடலும் இனிக்கும்!
பொறுத்திருப்பதால்-
நம் காதல் பூமியை ஜெய்க்கும்!
திருமதி முருகேசன் அவர்களால் யூடா தமிழ்ச் சங்கத்தின் பனிமலர் இதழுக்காக எழுதப்பட்டது.
உறவுகள்
நெருங்கிய சொந்தங்களின்
நெருக்கம் தூரத்தில் இருக்கும்பொழுது.
கடிகாரம்
கால்கள் இல்லை
ஆனாலும்
ஒலிம்பிக்கில்
உனக்கே
தங்கப்பதக்கம்.
மழை
யானை இருந்தாலும்,
இறந்தாலும்,
ஆயிரம் பொன்
நீ வந்தாலும்,
வராவிட்டாலும்,
கண்களில் கண்ணீர்.
1 Comments:
Good One,
Jude
Salt Lake City
Post a Comment
<< Home