Wednesday, December 20, 2006

அவன்

காதலே கனவுகளாய் சிலருக்கு
கனவுகளே காதலாய் சிலருக்கு - ஆனால்
இவ்வுலகில்காதல் தாக்கமே உணராத உயிர் உண்டா?
இருந்தால் கூறுங்கள் - அங்கேஇதயம் துடிக்கிறதா என்று பார்ப்போம்!

அவளுக்கு, அவன் அத்தான் முறை
அவனுக்கு, அவள் அத்தை மகள்
முறையால், முறையாக வந்ததுதான் அந்த உறவு
அவள் பெயர் அமுதா. பெயரமுதா? அழகானவள்
அவன் அறிந்த ஒரே பெண் என்பதினாலோ
என்னவோஅமுதாவை அழகி,
பேரழகியென்றே வடித்தது அவனிதயம்
ஒரு பெண்ணின் அழகை அளவிட இயந்திரம்முண்டா?
அவனவன் இமைகளைத் தவிர?


கம்பராமாயனத்திற்கு சீதை அழகி
உதயகுமாரனுக்கு மணிமேகலை அழகி
கிரேக்க இலிதியத்திற்கு ஹெலன் அழகி
அவனுக்கு அந்த அமுதாதான் அழகி!
பத்து வயதில் பாவாடை அழகி
பதினாறு வயதில் தாவணி அழகி
சேலைக்கு மாறியதால் விலகிய மாராப்பழகி
மார்டன் குமரி சுடிதார் அழகி

ஆடை தவிர்த்து எந்த ஆடவனாவது பெண்ணை
அழகி என்று சொன்னதுண்டா?
அவன் சொல்லியிருக்கிறான் அமுதாவைப் பார்த்து!
அடியே அமுதா உந்தன் ஆடைகள் அழகல்லஅவை மறைத்திருக்கும் மாடங்களும் அழகல்லஅன்னமே உன்
அகமிருக்கும் "அன்பே" எனக்கழகு.


இறைவன் படைப்பின் ரகசியம் அறியாவிடின் யாவும் அழகுதான்
அறியும் முன்னே அவளது அகம் தெரிந்தால் அது பனைமர உறவு
பலன் பாராது பலமாய் நிலைத்திற்கும் அன்பு!

அவளை அறிந்தபின்னே அகம் தெரிந்தால் அது தென்னைமர உறவுமுளைப்பால் தந்தால் தலைப்பால் தரும் அளவான அன்பு!

அவளை அளந்த பின்னே அகல நேர்ந்தால் அது வாழைமர உறவு
வளமாய் இருந்தால் மட்டுமே நலமாய் இருக்கும் அன்பு!
ஆக அவன் அமுதாவிடம் பரிமாறியதோ பனைமர அன்பு


செவத்த பாத்திமாவும் கருத்த மீனாவும் இருக்க
பாதி ஆண்களுக்கு பாத்திமா அழகி
மீதி ஆண்களுக்கு மீனா அழகி
மொத்தத்தில்கருப்பியும் செவப்பியும் அழகிகளே
இதுவெறும் புற அழகின் வகைப்பாடே!
ஆனால் அமுதாவோ உள்ளம் கொடுத்து உயிரை எடுக்கும் அழகி.


அறிந்த நாளில் இருந்தே அவனை 'அத்தான்' என்றுதான்அழைப்பாள் - இது அத்தையின் கண்டிப்பான கட்டளை!சில நேரங்களில், விளையட்டில் தோற்றுவிட்ட கோபத்தில்அமுதா அவனை பெயர் சொல்லி அழைத்ததுமுண்டு! அழைத்து அத்தையிடம் அடி வாங்கியதும்முண்டு! - அத்தைக்கு அவ்வளவு பாசம் அவன் மீது-ஓன்று விட்ட உறவைஒன்று சேர முயற்சித்தாளோ என்னவோ?

அவன் பெயரைச் சொன்னதால் அடிவாங்கிய அமுதாஅடுத்தடுத்த விளையாட்டில் தோற்றதாய் அவனுக்கு நினைவில்லை.


காலாண்டு.. அரையாண்டு..முழுவாண்டுத் தேர்வுகள் முடிந்து - பள்ளிவிடுமுறை விடும்போதெல்லாம் - அவர்கள் வீடு முறை மாறிவிடும்! ஓன்றுஅமுதா வீட்டில் அவன் - அல்லது
அவன் வீட்டில் அமுதா!
விடுமுறை நாட்கள் நகர்வது - அவர்களுக்கு
வினாடிகள்தான், விளையாட்டுகள்தான்


தன் தம்பியிடமே தகரவண்டிக்குதகராறு செய்பவன் - அமுதாவுக்கு அல்லிமலர்களை பறித்துக் கொடுப்பதென்ன?
அடுக்குமல்லி தோடுத்து கொடுப்பதென்ன?
கொல்லைத் துளசியை நன்னீரில்கழுவி சுவைக்கச் சொல்வதென்ன?
அவள் பல்லை காக்க கடிய கரும்பை உரிந்துக் கொடுப்பதென்ன?
இப்படி ஏராளம் ஏராளம் - அவளென்றால்
அவன் தாராளம் தாராளம்!


ஒருமுறை - நீச்சல் கற்றுக் கொள்வதற்காக
அமுதாவின் முதுகில் சுரைகுடுவையைக் கட்டி
அவளைக்கிணற்றில் தூக்கிப்போட்டார் அவன் தந்தை
அன்று, அவள் போட்ட அலறல் சத்தம் - இன்னும்
அவன் காதுகளை அடைக்கிறது - அதுதான்
அமுதா, முதலும் கடைசியுமாய் கிணற்றில் குதித்தது!

நீந்தி வருவாளா?


-அவன்

0 Comments:

Post a Comment

<< Home